புதினை கொல்ல அமெரிக்கா திட்டம்? பிரபல செய்தியாளர் பேட்டி; அணு ஆயுத போர் வெடிக்கும் என ரஷியா எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம், அதிபர் புதினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தியாளர் டக்கர் கார்ல்சன்,  சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.எனினும் அவர் இதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் தற்போது உலக ரஷிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி மெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர், ரஷிய அதிபர் புதினுக்கு தங்கள் நாட்டின் பாதுகாப்பு படை மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஷிய நாடாளுமன்ற சபாநாயகர் வயாசெஸ்லாவ் வோலோடின், இந்த விவகாரத்திற்கு காட்டமான முறையில் பதிலளித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதினை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதும், அதைப் பற்றி விவாதிப்பதும் மிகப்பெரிய குற்றமாகும். அது உலக பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் இது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

புதினை கொல்ல அமெரிக்கா சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய அதிபர் புதினின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது தலை துண்டித்து கொலை செய்ய அமெரிக்க பாதுகாப்புத்துறை திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த தகவலை மூட நம்பிக்கை என்று கூறி ரஷியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US plan to assassinate Putin


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->