ரஷ்ய பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீச்சு! ஒருவர் பலி.!
Ukraine army bomb Russian border
ரஷ்யா பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேனா போரினால் இவ்விரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்யா கிராமங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ரஷ்ய எல்லை நகரமான பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
English Summary
Ukraine army bomb Russian border