ரஷ்ய பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீச்சு! ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேனா போரினால் இவ்விரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்யா கிராமங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ரஷ்ய எல்லை நகரமான பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine army bomb Russian border


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->