ரஷ்யா-உக்ரைன் போர் : உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் போலந்து, ஹங்கேரி, சுலோவாக்கியா, ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா அகதிகள் முகாமை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகளுக்கான ஐநா சபை உயரதிகாரிகள் பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் 'உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine 17 lakshs refugees Asylum in the neighborhood


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->