உக்ரைன் கருங்கடல் துறைமுக தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா அறிவிப்பு - துருக்கி தகவல்
Turkey says Russia not involved in port attack
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களை கைப்பற்றியதுடன் அடுத்தடுத்த தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவும், உக்ரைனும், அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் முன்னிலையில் கையெழுத்தானது.
இருப்பினும் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதையடுத்து ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவுடன் நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்ததாக துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசாய் அகார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர் தாக்குதல் நடந்துள்ளது என்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும், இந்த விவகாரம் பற்றி விரிவாகவும், தீவிர விசாரணை செய்தும் வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Turkey says Russia not involved in port attack