End of Ceasefire; பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது; ட்ரம்ப் அறிவிப்பு..!
Trump announces that the US has accepted Irans request for talks
பேச்சுவார்த்தை மேற்கொள்வது குறித்து ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இருப்பினும் இருதரப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு கூறியுள்ளதாவது;
''பேச்சுவார்த்தையை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா சொல்லியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து விரிவான விளக்கத்தை அவர் வெளியிடவில்லை.

கடந்த மாதம் 17-ஆம் தேதி, ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றன. அதில், இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் இடம்பெற்றன.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும் என்றும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 03 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தியாதல் மீண்டும் பதற்றம் நிலவியது.

அதற்கு பதிலடியாக ஈரானின் துறைமுக நகரங்கள் பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்களில் அமெரிக்கா நேற்று முன்தினம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், வான் பாதுகாப்புக் கருவிகள், ரேடார் மையங்கள், ஏவுகணை தளங்கள், 60-க்கும் மேற்பட்ட கடற்படை படகுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையம் சென்ட்காம் அறிவித்தது.
அத்துடன், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Trump announces that the US has accepted Irans request for talks