நடுவானில் பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர்!
The life of a newborn baby separated in the middle
மொரிஷியசில் இருந்து இருதய சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்ட பச்சிளம் குழந்தை நடுவானில் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொரிஷியஸ் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான மோனிஸ் குமார் ,இவருக்கு 32 வயதில் பூஜா என்ற மனைவி உள்ளார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்குமுன் மொரிஷியசில் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.அப்போது அந்த தம்பதி பெரு மகிழ்ச்சியில் திகைத்தனர்.பின்னர்தான் தெரியவந்தது அந்த பச்சிளம் குழந்தைக்கு இருதய பிரச்சினை இருந்துள்ளது என்பது . இதனதால் தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்தில் உயர் சிகிச்சைக்கு அந்த தம்பதி ஏற்பாடு செய்தது.
இதையடுத்து, குழந்தையின் இருதய சிகிச்சையை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள திட்டமிட்ட அந்த தம்பதி ,8 நாட்களே ஆன தங்கள் குழந்தையை இன்று மொரிஷியசில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். நடுவானில் விமானத்தில் வந்தபோது திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் வந்த தம்பதி கலங்கி நின்றதை பார்த்தால் கல் நெஞ்சமும் கரைத்துவிடும்,
விமானம் சென்னையில் தரையிறங்கிய நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததுதொடர்பாகபோலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்.மொரிஷியசில் இருந்து இருதய சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்ட பச்சிளம் குழந்தை நடுவானில் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The life of a newborn baby separated in the middle