நேபாளம்! திடீரென 5.3 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


நேபாளம் நாட்டில் நேற்று காலை 10.18 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுதுர்பாசிம் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சில நிமிடங்கள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்

மேலும் தார்ச்சுலா, பஜாங் மற்றும் தாடெல்துரா மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The earthquake affected western Nepal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->