ஈரானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 4 பாதுகாப்பு வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான ஈரானில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகணங்களில் உள்நாட்டுப் போரின் காரணமாக அமைதியின்மை நிலவி வருகிறது. இதனால்‌ எல்லைப்பகுதிகளில் ஐ.ஆர்.ஜி.சி எனப்படும் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அருகே அமைந்துள்ள சிஸ்தன் மாகாணத்தில் சரவான் கவுன்டி பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பாதுகாப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தாக்குதல் நடத்திய பின்பு பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானின் கிர்குக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் போலீசார் பல பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist attack killed 4 soldiers in iran


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->