சிரியாவில் கண்ணி வெடியில் சிக்கி விவசாயிகள் 5 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சிரியாவில் கண்ணி வெடியில் சிக்கி 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

சிரியா நாட்டில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களையும், அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிரியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தாரா மாகாணத்தில் டெய்ர் அல்-அடாஸ் என்கிற கிராமத்தில் கோதுமை அறுவடை செய்யும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகளால் சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த பேருந்து சிக்கியது.

அப்போது கண்ணி வெடி வெடித்து சிதறியதில் பேருந்து உருக்குலைந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த விவசாயிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Syria Bomb blast formers 5 Death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->