தென்னாப்பிரிக்காவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு! 45 பேர் பலி.!
SouthAfrica flood
தென்னாபிரிக்காவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா குவாஷீலு-நடாலா பகுதியில் நேற்று முன்னாள் இரவு முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழையால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கும், ஓரிரு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளத்தில் சிக்கியுள்ள பலரை மீட்புக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
மேலும் 70 ஆண்டிற்கு மேலாக இருந்த இந்துக் கோயில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ளது. இந்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.