ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு விவகாரம்: இந்திய எதிர்ப்பை நிராகரித்து சீனா அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தாக்கு 1963 ஆம் ஆண்டு பாகிஸ்தான் – சீனா எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானால் சீனாவிற்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், சீனா ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை தீவிரமாக உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இந்த பகுதி காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு இது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதற்கு எதிர்வினையாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான அறிக்கையை வெளியிட்டது. அதில், “இந்தியாவின் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானத்தையும் இந்தியா ஏற்காது. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு சீனா மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை” என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீனாவிடம் தூதரக ரீதியாக இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கே சொந்தமான பகுதி என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் யீ பேசுகையில், “சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முழு உரிமை பெற்றுள்ளது. இதில் பிற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. 1963 ஆம் ஆண்டு பாகிஸ்தான் – சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது சட்டப்பூர்வமானது. இந்தியாவின் எதிர்ப்பு வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியே” என கூறினார்.

ஏற்கனவே லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சீனா கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சூழலில் தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கிலும் சீனாவின் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளமை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மேலும் சவாலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shaksgam Valley issue China rejects Indian objections announces action


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->