செனகல் நாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டிலுள்ள திவாவோன் நகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பரிதாபமாக 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டின் அதிபர், 'மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senegal hospital fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->