மரண படுக்கையாக மாறும் நிவாரண முகாம்கள்: இரத்த வாடையில் ஒருவேளை உணவு: காசா மக்களின் அவல குரல்..!
Relief camps turning into deathbeds are the plight of the people of Gaza
காசாவில் நேற்று நிவாரண முகாம்களில் அடிப்படை தேவைகளுக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 56 பேரை இஸ்ரேல் ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு ரஃபா பகுதியில் மட்டும் 27 நபர்கள் துப்பாக்கி முனையில் சுடப்பட்டுள்ளார்கள். நிவார முகாம்கள் மட்டுமன்றி வேறு இடங்களில் அப்படி பொதுமக்கள் கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்கதையாக உள்ளது. இப்படியாக காசாவின் மனிதநேய அமைப்பின் நிவாரண மையங்களில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஐ கடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
-ptc5a.png)
நிவாரண முகாம்களையும் மரண படுக்கைகளாக மாற்றி கண்டு இருக்கிறது இஸ்ரேல். ஒருவேளை உணவுக்காக வரும் அவர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிகவும் அரக்கத்தனமான செயல். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்.
இது மிகவும் மோசமான உலகம். நீதி, நேர்மை என்னும் ஏதும் இல்லாத உலகம். மொத்த உலகமும் எங்களை கைவிட்டு விட்டது. டஜன் கணக்கில் எங்களை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒரு ரொட்டி துண்டுக்கு உசுர கொடுத்து கொண்டு இருக்கிறோம் என கண்ணீர் மல்க நாளை உயிருடன் இருப்போமா என்ற பயத்திலும் விரக்தியில் பேசுகின்றனர்.
-9edez.png)
நிவாரண பொருள் வழங்கப்படுகிறது என்ற சொல்லும் இடங்களுக்கு செல்லும் பலர் நிவாரண பொருட்களை வாங்க கொண்டு வீடுகளுக்கு திரும்புவதே இல்லை என்று வேதனையை தெரிவித்துள்ளனர். தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்காக உணவு வாங்க செல்லபவர்கள் “இந்த உணவில் ரத்த சுவை உண்டு” என்று கூறுவது கொடுமையின் உச்சம் என்று சொல்லலாம்.
இது குறித்து சர்வதேச ஊடகத்திற்கு காசா மக்கள் சிலர் கூறியதாவது; நிவாரண டிரக்குகளை நோக்கி செல்பவர்களை இஸ்ரேல் ராணுவம் முதலில் சுட்டு வீழ்த்துவதாகவும், ராணுவம் நோக்கி வந்ததால் சுட்டோம் என அவர்கள் பொய்யாக நியாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Relief camps turning into deathbeds are the plight of the people of Gaza