பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பெண்களின் கவர்ச்சியான ஆடையே காரணம் - பாக். பிரதமர் இம்ரான் கான்.!
reason for the sexual allegations is the sexy dress of women Pak Prime Minister Imran Khan Says
அரைகுறையாக பெண்கள் ஆடை அணிவதால் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளார்.
உலகளவில் பிரபலமான HBO தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டியளித்தார். இதுதொடர்பான பேட்டியில் அவர் பேசுகையில், " பெண்கள் உடலை அல்லது உடலின் அங்கத்தை காட்டும் வகையில் கவர்ச்சியான ஆடைகளை அணிகிறார்கள்.
இவ்வாறு ஆடைகளை அணிவதால் ரோபோக்கள் ஆக இல்லாமல் இருந்தால் தவிர்த்து, ஆண்களிடம் அது உணர்வை தூண்டுகிறது. இதனால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணமாகவும் அமைகிறது என்று தெரிவித்தார்.
இந்த விஷயத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் இணையவாசிகள், பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரும் இம்ரான்கான் பாலியல் வன்கொடுமைகளை ஆதரிப்பவர் என்றும், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரானவர் என்றும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
reason for the sexual allegations is the sexy dress of women Pak Prime Minister Imran Khan Says