திடீர் பரபரப்பு.. ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட்ட மக்கள்.. ராணுவம் வாகனத்திற்கு தீ வைப்பு.!! - Seithipunal
Seithipunal


வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் பெட்ரோல் போட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால், மின் வினியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நகரில் ஒரு நாள் ஒன்றுக்கு 13 நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. மற்ற நகரங்களில் 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். அங்கிருந்து தடுப்பு வேலிகளை அகற்றி ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் முற்றுகைப் போராட்டம், வன்முறையாக மாறியது. 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்ததும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்புவில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது எடுத்து கொழும்பு நகரில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

protest in sri lanka president residence


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->