''இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்டுவதை அனுமதிக்கக்கூடாது,'' போப் லியோ வலியுறுத்தல்..!
Pope Leo emphasizes that one should not allow another to threaten the existence of another
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் மோதல் போக்கு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், '' இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்டுவதை அனுமதிக்கக்கூடாது,'' என போப் லியோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து போப் லியோ மேலும் கூறியதாவது: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் பெரிய கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அணுசக்தி அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான உலகத்தை கட்டமைப்போம் என்ற உறுதிப்பாட்டை, நிறைவேற்ற அமைதியான வழியில் நிறைவேற்ற வேண்டும் என்றும், நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்ட அனுமதிக்கக்கூடாது எனவும், அமைதிக்கான காரணத்தை ஆதரிப்பது, நல்லிணக்க பாதைகளை தொடங்குவது, அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவிப்பது அனைத்து நாடுகளின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.
English Summary
Pope Leo emphasizes that one should not allow another to threaten the existence of another