லிபியா || பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் பலி - Seithipunal
Seithipunal


வட அமெரிக்க நாடான லிபியாவின் மத்திய நகரமான பெண்ட் பய்யாவில் பெட்ரோல் டேங்கர் லாரி போக்குவரத்து நெரிசலில் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் லாரி தீ மற்றும் வெடிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் மீறி லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக மக்கள் விரைந்த பொழுது லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தினால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மின்கம்பங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இதைத்தொடர்ந்து நகர காவல் துறை போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol Tanker lorry accident in libya


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->