பாகிஸ்தானில் கொடூர விபத்து | ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் துடிதுடிக்கப் பலி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள செஹ்வான் ஷெரீப் புனித சூஃபி ஆலயம் செல்வதற்காக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் வண ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

​அப்போது கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலை அருகே இருந்த 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து கொடூரமான விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள், 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். பலியானவர்களின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, வேன் ஓட்டுநர் கைர்பூர் மிர்ஸை சேர்ந்தவர. சாலையின் நடுவே இருந்த தடுப்பில் கவன குறைவாக மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan sindhu road accident 20 members death in one family


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->