3 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.82 ஆயிரம் கோடி இழந்த பாகிஸ்தான்!
Pakistan lost 82 thousand crores in the stock market in 3 days
அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது .
இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்த தாக்குதல் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது.அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அப்போது பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது.இதனால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். இருந்தபோதிலும் கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan lost 82 thousand crores in the stock market in 3 days