3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - திருநெல்வேலியில் வாலிபர் கைது.!!!
youth arrested for harassment in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே ஆனைகுடி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முத்துராஜா. பக்கத்து ஊரான இடையன்குடி பகுதியில் வசித்து வரும் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராஜா, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி அழுதபடி வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for harassment in tirunelveli