பாகிஸ்தான் | நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இயற்கை சீற்றம்: குழந்தைகள் உள்பட 10 பேர் பலி.!
Pakistan heavy rain and snow storm 10 people died
பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்புயல் காரணமாக 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை மற்றும் பனிப்புயல் தொடர்ந்து பெய்து வருவதில் 27 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் இந்த இயற்கை சீற்றத்தினால் 8 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கனமழை மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan heavy rain and snow storm 10 people died