2 நாட்கள் அனைத்துப் பள்ளிகளும் மூடல்: கவுதம் புத் நகர் நிர்வாகம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா முழுவதும் குளிர் காலநிலை காரணமாக இன்று மற்றும் நாளை அனைத்து பள்ளிகளையும் மூட கவுதம் புத் நகர் நிர்வாகம் உத்தரவிட்டது. 

இது தொடர்பாக அடிப்படை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவில், 'நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் குளிர் காலநிலை காரணமாக இன்று மற்றும் நாளை அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு கவுதம் புத் நகர் நிர்வாக உத்தரவிட்டுள்ளது. 

கடுமையான மூடுபனி மற்றும் குளிர் காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைத்து வாரியங்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கவுன்சில் பள்ளிகள், அரசு அல்லது அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிகளின் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வழக்கம் போல் பணியில் ஈடுபடுவார்கள்' என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Noida All schools closed 2 days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->