பிரேசில் : துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் வெடி விபத்து - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பிரேசிலின் வடமேற்கு பகுதியில் அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 

அப்போது அந்த இடத்தில், திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், பயிற்சி மையம் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டனர். 

இருப்பினும், இந்த விபத்தில் பயிற்சி மையத்தில் இருந்தவர்களில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அனைத்து பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near brezil four peoples died for shooting club explossion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->