#நைஜீரியா || கிராமங்களுக்குள் புகுந்து மர்ம கும்பல் தாக்குதல் - 30க்கும் மேற்பட்டோர் பலி - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பல ஆயுதமேந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் போலா டினுபு அதிபராக பதவியேற்ற பின்பு பயங்கரவாத குழுக்கள் தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நைஜீரியாவில் வடமேற்கு மாகாணமான சொகோடாவின் ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ரக்கா, பிலிங்கா மற்றும் ஜபா பகுதிகளில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி குடிசைகளையும், கார்களையும் எரித்ததாக தெரிவித்துள்ளனர். மர்மநபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை மேலதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மர்ம நபர்கள் கிராமங்களில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 30 died as Suspects attack in Nigeria


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->