உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொது மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்.! ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரினால் இரு நாடுகளுக்கும் அதிக அளவு பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனிலிருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான ஆணையை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, உக்ரைனிலிருந்து கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ரஷ்யா வரும் அனைவருக்கும் மாதம் 10000 ரூபிள் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவால் சுதந்திர மாகாணங்களாக அங்கீகரிக்கப்பட்ட லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து ரஷ்யாவுக்கு வருபவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monthly pension for people come to Russia from Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->