லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மைத் தொற்று தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில் கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய கிழக்கு நாடான லெபனானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறிய பட்டதையடுத்து, அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monkeypox is the first case in Lebanon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->