இஸ்ரேல்- ஹமாஸ் போர்:  பலி எண்ணிக்கை 56 ஆயிரமாக உயர்வு! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி  ஹமாஸ் ஆயுதக்குழுவினர்  இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி  பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

மேலும் பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் போரில் காசாவில் இதுவரை 56 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 848 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel-Hamas war Death toll rises to 56,000


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->