காபூல் தாக்குதலில் 5 பேர் பலி - ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலிபான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நேற்று முன்தின மாலை சுமார் 4 மணியளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தற்கொலை குண்டுதாரி அமைச்சக வளாகத்திற்குள் நுழைய முயன்றுபோது குண்டுவெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, காபூல் காவல்துறைத் தலைவர் காலித் சத்ரன், இஸ்லாமிய எமிரேட் முஸ்லீம்கள் மீதான இத்தகைய நோக்கமற்ற மற்றும் கோழைத்தனமான தாக்குதலைக் கண்டிக்கிறது என்றும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் தீய செயல்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IS claimes responsibility for Kabul attack that 5 killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->