ஈரான் போர் எதிரொலி: பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் குடிநீர் பாட்டில்கள் விலை கடும் உயர்வு!
Iran War Crisis Plastic Raw Material Shortage Triggers Hike in Bottled Water Prices
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைத்துள்ளன. கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் பெட்ரோ ரசாயனப் பொருட்களே பிளாஸ்டிக் தயாரிப்பிற்கு அடிப்படையாகும். தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பாலி எத்திலீன், பிவிசி, மற்றும் பாலி புரோப்பிலீன் போன்ற மூலப்பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது.
குடிநீர் பாட்டில்களின் புதிய விலை நிலவரம்:
பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்திச் செலவு உயர்ந்ததைத் தொடர்ந்து, குடிநீர் பாட்டில்களின் சில்லறை விற்பனை விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது:
200 மி.லி: ₹8 ➔ ₹10
500 மி.லி: ₹12 ➔ ₹16
1 லிட்டர்: ₹20 ➔ ₹25
5 லிட்டர்: ₹50 ➔ ₹70
20 லிட்டர் கேன்: ₹45 ➔ ₹55
300 மி.லி பாட்டில்கள் ₹12-க்கும், 2 லிட்டர் பாட்டில்கள் ₹35-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடே இந்தத் திடீர் விலை மாற்றத்திற்குக் காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசியத் தேவையான குடிநீரின் விலை உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Iran War Crisis Plastic Raw Material Shortage Triggers Hike in Bottled Water Prices