தொடர் மழை வெள்ளம் எதிரொலி.! 25 பேர் பரிதாப பலி.!!
in Somalia flood peoples died
சோமாலிய நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பிடியில் மக்கள் சிக்கி., மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக முடங்கியுள்ளது.
மேலும்., இந்த மழையானது இன்னும் ஒரு வாரத்திற்கு பெய்யும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்., கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் முழ்ங்கியுள்ளது.
தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் சுமார் 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில்., அவசர உயிருக்கும் அறிவுரையை சோமாலிய அரசு வழங்கியுள்ளது.
மழை வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் 25 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., சுமார் 47 பேர் காயமடைந்துள்ளனர். இதனைப்போன்று 5 இலட்சத்து 47 ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில்., சுமார் 2 இலட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள ஹிர்ஷாபெல்லே., ஜீபாலந்து மற்றும் ஜீபா., ஷாபேல் நதியில் இருக்கும் கரையோர பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்ங்கியுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Somalia flood peoples died