காஷ்மீரில் நடவடிக்கை குறித்து கேள்வியை எழுப்பிய அமெரிக்கா..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தானது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 5 ஆம் தேதியன்று இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காஷ்மீரில் மக்கள் நடமாட்டம் மற்றும் தகவல் தொடர்பு சேவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு., அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து காஷ்மீரில் இயல்பு நிலையானது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில்.,  தற்போது இயல்பு நிலையானது திரும்பி வந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில்., காஷ்மீர் பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதார இயல்பு நிலையை திரும்ப கொண்டு வருதலுக்கு என்ன திட்டத்தினை கையளவுள்ளீர்கள் என்று அமெரிக்கா கேள்வியை எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்கா நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பொறுப்பு துணை செயலாளர் அலைஸ் ஜி வேல்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., தடுப்பு காவலில் இருக்கும் நபர்களை விடுதலை செய்து., முழுமையான இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும்., அரசியல் மற்றும் பொருளாதார நிலையை வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். 

இந்த நிலையில்., காஷ்மீர் பகுதியில் போஸ்ட் பைட் சேவையினை வழங்கியுள்ளதில் உள்ள முன்னேற்றத்தினை கவனித்து வருகிறோம். இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா., ஜெய்ஷ்-இ-முகம்மது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தால் பெரும் பிரச்சனை உள்ள நிலையில்., எல்லையை தாண்டிய வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை விரும்புகிறோம் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Kashmir action doing by Indian govt america asks question


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->