கானாவில் வெளுத்துவாங்கிய மழை.! அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. கண்ணீரில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பலவிதமான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நமது செயல்பாடுகளால் மாறிய பருவநிலை காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் அனைத்து நாடுகளிலும் எந்த வருடத்திலும் இல்லாத மழைப்பொழிவு., வெயில்., வறட்சி., வெள்ளம் போன்றவை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்., மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாட்டில் கானாவில் மழை வெளுத்து வாங்கியது. 

மேலும்., கானாவை பொறுத்த வரையில் மழை என்பது வருடம் முழுவதும் பெய்யாமல் இருந்தாலும்., இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களாகவே விடாமல் பெய்த கன மழை எதிரொலியாக சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். 

இது மட்டுமல்லாது சுமார் 300 வீடுகள் வெள்ளத்தின் காரணமாக தரைமட்டமாகியுள்ளதாகவும்., வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kana country flood peoples died quantity increased 28 nos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->