ஒரு வயது பச்சிளம் குழந்தை உட்பட, 6 குழந்தைகள் - தாய் தீயில் கருகி துடிதுடித்து பலியான பரிதாபம்..! பகீர் வீடியோ காட்சிகள்..!!
in america mississippi clinton area fire accident mom and babies died
அமெரிக்கா நாட்டில் உள்ள மிஸிஸிபி மாகாணத்தில் இருக்கும் கிளிண்டன் நகரை சார்ந்தவர் பிரிட்டானி ப்ரெஸ்லி (வயது 33). இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில், இவரது கணவர் மற்றும் ஆறு குழந்தையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில், நேற்று முன்தினத்தின் போது நள்ளிரவு நேரத்தில் ப்ரெஸ்லி மற்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், வீட்டின் உள்புறம் திடீரென தீப்பற்றி இருந்துள்ளது.
இந்த தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் மளமளவென பரவியதை அடுத்து, வீட்டில் இருந்த ப்ரெஸ்லி மற்றும் அவரது 6 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளில் 1 வயதாகும் பச்சிளம் குழந்தையும் இருந்துள்ளது. பிரிட்டானி மட்டும் பலத்த தீக்காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், இவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் எப்படி தீப்பற்றி எரிந்தது என்பது தொடர்பான விபரம் தெரியவராத நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in america mississippi clinton area fire accident mom and babies died