நினைத்தாலே வெறுப்பு! யானைகள் பெருக்கம் அதிகமானதால் ஜிம்பாவே எடுத்த கோர முடிவு...! - Seithipunal
Seithipunal


அதிக எண்ணிக்கையில் போட்ஸ்வானா நாட்டில் யானைகள் உள்ளன.இதில் ஆப்பிரிக்காவிலுள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன. கிட்டத்தட்ட அதே போல், போட்ஸ்வானாவிற்குப் பிறகு உலகின் 2 வது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.

மேலும் ஜிம்பாப்வே  அரசு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளது.

இதில் சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை, என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் யானைகளிலிருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இச்செய்தி குறிப்பாக உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

இதை உலக மக்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I hate to think about it cruel decision taken by Zimbabwe due to increasing number of elephants


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->