''முதல்வர் விஜய்க்கு எதிராக தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி விரைவில் வெடிக்கும்''; ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா ஒன்றில் தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய்யை நம்பி மக்கள் நம்பி வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களின் பிரச்னைகளுக்கு வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திலேயே அவரது சாயம் வெளுத்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சமீபகாலமாக பாலியல் வன்முறையும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இதற்கு திமுக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே, தவெக ஆட்சி குறித்து 06 மாதங்களுக்கு கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால், சமீபகாலமாக நடப்பவற்றை கண்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாங்கள் தவெக அரசின் 06 மாத சாதனைகளுக்குத்தான் கால அவகாசம் கொடுத்தோம். ஆனால், தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை, குற்றங்கள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார். அவரது அலட்சிய நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி விரைவில் வெடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RS Bharathi warns that a massive revolution against Chief Minister Vijay will soon erupt in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->