கியூபா! ஹோட்டலில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கியூபாவில் ஹோட்டல் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கியூபா நாட்டில் உள்ள சரடோகா என்ற ஹோட்டல் க்யூபா தலைநகரமான ஹவானாவில் உள்ளது. நேற்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்த ஹோட்டலில் திடீரென்று பயங்கரமான வெடி சத்தம் ஏற்பட்டது. இதில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு பணியினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் ஹோட்டலில் சமையல் கியாஸ் சிலிண்டர் கசிந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge blast in hotel in cuba


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->