ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை: ஆயிரக்கணக்கானோர் முகாமில் தஞ்சம்
Heavy rain lashesout UAE
கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால் நகரங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக புஜைரா துறைமுகத்தில் 234.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள், தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் உள்ளூர் காவல்துறை மற்றும் அவசர சேவை அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கனமழையால் ஆசியாவைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய 3,897 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் ,1000க்கும் மேற்பட்டோர் சார்ஜாவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.