எம்மாம் பெருசு... சாதனை படைத்த விவசாயி.! நெகிழ்ந்துபோன போட்டியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பல விதமான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் நபர்கள், வெற்றியை அடைய பல முயற்சியை செய்து வருகின்றனர். அந்த வகையில், அதிக இடையிலான காய்கறிகளை விளையவைக்கும் போட்டி மேலை நாடுகளில் நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில், ஜெர்மனி நாட்டில் 2020 ஆம் வருட பூசணி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த போட்டி ஐரோப்பிய இராட்சச காய்கறி வளர்ப்போர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வரும் நிலையில், இந்த வருடத்திற்கான போட்டி ஜெர்மனி நாட்டில் உள்ள லுட்விக்ஸ்பர்க் (Ludwigsburg) நகரில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய நாடுகளை சார்ந்த விவாசாயிகள் கலந்து கொண்ட நிலையில், ஜெர்மனியை சார்ந்த ஆலிவர் லாங்ஹெய்ம் என்ற நபர் விளைவித்த பூசணி அதிக எடையுள்ளதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பூசணியின் எடை 745 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Germany most weight pumpkin award 2020 champion


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->