நொடியில் நொறுங்கிய நான்கு மாடிகள்..! - இரண்டு குடியிருப்புகள் சரிந்து 22 உயிரிழப்பு...!
Four floors collapsed instant Two residential buildings crumble 22 lives lost
மொராக்கோவின் முக்கிய நகரமான ஃபெஸ் நேற்று இரவு பெரும் விபத்தில் தள்ளாடியது. நகரின் நடுப்பகுதியில் அருகருகே இருந்த இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் திடீரென சரிந்து சாம்பலானது.
இந்த கட்டடங்களில் வசித்த எட்டு குடும்பங்கள் சில நிமிடங்களில் இடிபாடுகளில் புதைந்து அச்சத்திலும் அலறலிலும் சிக்கினர்.முதல் கட்டமாக 19 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் வேகமெடுத்த பிறகு பலர் இடிபாடுகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதால், மரண எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 16 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இடிபாடுகளுக்குள் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய முடியாததால், மீட்புக்குழுக்கள் பகல்–இரவு பாராமல் தேடுதல் பணியை தொடர்ந்து வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் தீவிரமாக தொடங்கியுள்ளது.இந்த சம்பவம், மொராக்கோவில் இந்த ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய பேரழிவுகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன் கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட கட்டட சரிவு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.
English Summary
Four floors collapsed instant Two residential buildings crumble 22 lives lost