இலங்கை || குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! 60 வீடுகள் எரிந்து சேதம்.! - Seithipunal
Seithipunal


இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தொட்டலங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

சுமார் 300க்கும் மேற்பட்ட மரத்தால் ஆன வீடுகள் உள்ள பகுதியில் தீ பற்றியதால், அடுத்தடுத்த வீட்டிற்கு எளிதாக தீ பரவத் தொடங்கியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து போதைக்கு அடிமையானவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து தான் தீ பரவியது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire guts 60 houses in Srilanka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->