புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லாபியர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


1931ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி சாட்லைலோனில் பிறந்த புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லாபியர்(91) நேற்று காலமானார். இவர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸ் உடன் இணைந்து எழுதிய ஆறு புத்தகங்கள் சுமார் 50 மில்லியன் பிரதிநிதிகளிடம் விற்பனையானது. இவர்கள் இயற்றிய "இஸ் பாரிஸ் பர்னிங்?" என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது.

மேலும் கொல்கத்தாவில் ஒரு ரிக்‌ஷா இழுப்பவரின் கஷ்டங்களைப் பற்றி 1985ஆம் ஆண்டு வெளிவந்த லாபியரின் "சிட்டி ஆஃப் ஜாய்" நாவலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு 1992-ல் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் பேட்ரிக் ஸ்வேஸ் நடித்தார் மற்றும் ரோலண்ட் ஜோஃப் இயக்கினார்.

இவர் இந்தியாவிற்கு மனிதாபிமான திட்டங்களுக்கு ஆதரவாக "சிட்டி ஆஃப் ஜாய்" நாவல் மூலம் தனக்கு கிடைத்த ராயல்டிகளில் பெரும்பகுதியை லாபியர் நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு லாபியருக்கு குடியரசு தினத்தில், பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous French writer Dominique Lapierre has passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->