ஈராக் : டேங்கர் லாரி வெடித்து 8 பேர் உயிரிழப்பு.! 18 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஈராக்கின் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள அல்-பினூக் நகரில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெட்ரோலுடன் இருந்த டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்களில்.தீ பற்றியது. அதுமட்டுமின்றி சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களிலும் தீப்பற்றியது. 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். பல மணி நேரத்திற்குப் போராடி பின்னர் தீயை அணைத்தனர்.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே  8 பேர் தீக்கிரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக  அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பலரது நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று கருதபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erak petrol tanker lorry accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->