இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் டோபலே நகரில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று(பிப்ரவரி 23) சீனாவின் உய்கர் மாகாணத்தில் 7.3 மற்றும் கிழக்கு தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கஜகஸ்தானில் 5.0, 4.6, 4.9, 4.8 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவின் வடக்கே இன்று (வெள்ளிக்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் ஆழத்தில், டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிலோமீட்டர் (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்தது.

மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு மலுகு மாகாணத்தில் லேசான அதிர்வு உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 6 point 3 magnitude hits Indonesia


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->