ஒராங்குட்டான் மிருகம் அல்ல மனிதன் தான் நீதிமன்றம் உத்தரவு.!
court judgement to sandra
அர்ஜென்டினாவில் வாழ்ந்து வரும் ஒராங்குட்டானுக்கு மனிதர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகை மற்றும் உரிமைகளை வழங்க வேண்டும் என அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியில் பிறந்த சாண்ட்ரா என்ற பெயருடைய ஒராங்குட்டானுக்கு 33 வயதாகிறது. கடந்த 25 ஆண்டுகாலமாக அர்ஜென்டினாவில் உள்ள புயனெஸ் ஏர்ஸ் வனவிலங்குப் பூங்காவில் வாழ்ந்து வருகிறது. என்னதான் சாண்ட்ரா ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ஜென்டினாவிலேயே கழித்துள்ளது.
இந்நிலையில், 33 வயதை கடந்து வயதாகி வரும் சாண்ட்ரா இனி சட்டப்பூர்வமாக ஒரு மிருகம் இல்லை என அர்ஜென்டினா நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. உருவத்தால் மனிதன் இல்லை என்றாலும் கூட மனிதனுக்கு தேவையான அனைத்தும் அந்தஸ்து சாண்ட்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
court judgement to sandra