'உக்ரைனுக்கு நேரில் வந்து பாருங்கள்'.. பிறகு யோசனை கூறலாம்.! எலான் மஸ்கிற்க்கு பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றது. 

மேலும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதால், ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல் ஈடுபட்டுள்ளது. இதில் கடந்த வாரம் மட்டும் 30 குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் 258 முறை ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டெஸ்லா நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், உக்ரைனில் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்திருந்தார். 

ஆனால் எலான் மஸ்கின் கருத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் களத்திற்கு நேரடியாக வந்து, அங்கு ரஷ்ய படைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை எலான் மஸ்க் பார்வையிட வேண்டும். இதன் பிறகு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Come to Ukraine and then give your opinion Zelensky retorts to Elon Musk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->