தைவான் தனிநாடாக அறிவிக்கப்பட்டால் போர் தொடுக்க ஒரு போதும் தயங்கமாட்டோம்.! சீனா எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தைவான் தனிநாடாக அறிவிக்கப்பட்டால் போர் தொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா இதுவரை தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.

இருப்பினும் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், தைவான் மீதான நடவடிக்கைகளை சீனா தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் அதனை பிரிக்க முற்பட்டாலும், தைவானை தனிநாடாக அறிவித்தாலும் தைவான் மீது போர்தொடுக்க சீனா ஒருபோதும் தயக்கம் காட்டாது என்று சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கி தெரிவித்துள்ளார்.

இதனால் சீனா மற்றும் தைவான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China declare war on Taiwan if Taiwan leaves china


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->