இன்றைய வரலாறு.. இயற்பியல், வேதியியல் துறையின் முன்னோடி பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.

இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது 'ஆஸ்வால்டு நீர்த்தல் விதி" எனப்படுகிறது.

வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

இயற்பியல், வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 1932ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chemistrist bredtric willhom aswald


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->