புகை பழக்கத்தால் புற்றுநோய்: 13 லட்சம் போ் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா, சீனா, பிரிட்டன் உள்பட 7 நாடுகளில் புகைப்படக்கத்தால் ஏற்படும் புற்று நோய் காரணமாக ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் இந்த 7 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். 

இது தொடர்பான அறிக்கையை லான்செட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்டுள்ளது. அதில், சிகரெட், மதுபானம், உடல் பருமன் போன்றவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 

இதில் புகை பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் அதிகமானோர் பலியாகின்றனர். உலகம் முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் 2 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். 

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இதுபோன்ற உயிரிழப்பு 90 சதவீதம் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ஆண்களுக்கு தலை, கழுத்து பகுதிகளில் புற்றுநோயாலும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயாலும் பலியாகின்றனர். 

புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் மற்ற நாடுகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. புகைப்பழக்கம், மதுபானம் அருந்துவதால் சீனா, இந்தியா, ரஷ்யாவில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட 9 மடங்கு அதிகமாக உள்ளது. 

பெண்கள் அதிக அளவில் உடல் பருமன், பாலியல் வழி நோய் தொற்று போன்றவற்றின் காரணமாக உயிரிழப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancer due to smoking 13 lakh deaths


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->