உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவி - அமெரிக்கா அறிவிப்பு
America Announces 350 Million dollar Arms Aid to Ukraine
ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்போரில், உக்ரைனுக்கு ஆதரவாக போரின் தொடக்கத்தில் இருந்தே மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ஆயுத தொகுப்பில் வெடிமருந்துகள், ஹிமார்ஸ்ராக்கெட்-லாஞ்சர் அமைப்புகள், ஹோவிட்சர்கள், பிராட்லி காலாட்படை வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனிய மக்களின் எல்லையற்ற தைரியம் மற்றும் உறுதியான உறுதிப்பாடு மற்றும் சர்வதேச சமூகம் முழுவதும் உக்ரைனுக்கு வலுவான ஆதரவை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்துகிறோம் என்று ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
English Summary
America Announces 350 Million dollar Arms Aid to Ukraine