காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலில் 61 பேர் பலி!
61 killed in Israeli airstrike on Gaza
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61பேர் உயிரிழந்தனர். இதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை., பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் ஓயமாட்டோம் என இஸ்ரேல் காசா முனையில் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர். இதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 52 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
English Summary
61 killed in Israeli airstrike on Gaza